Friday, May 11, 2012

குருத்துமணல் - இப்றாஹீம் எம். றபீக் எழுதிய கவிதை




நூலாசிரியர்

இப்றாஹீம் எம். றபீக்கின் குருத்து மணல் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வின் போது என்னால்  வாசிக்கப்பட்ட உரை

டீன்கபூர்

குருத்துமணல் - இப்றாஹீம் எம். றபீக் எழுதிய கவிதைகள.;

றபீக் சுனாமியால் 65 மீற்றருக்குள் அகப்பட்டு பிரான்ஸ் சிற்றியில் வாழ்கிறார். இந்த குருத்து மணலுக்குள் நான் சில உடையாத சிற்பிகளை பொறுக்கியிருக்கிறேன்.

நீரை உன் அருகில் வைத்துக்கொண்டு தாகத்தால் வாடுவது நன்றாகப் புரிகிறது.
காற்றும் கடும் மழையும் ஆட்டி என்னை அசைத்தது. வாட்டி எடுத்த 
உணவைப்போல் வதங்கிவிட்டது உன்னை எண்ணி என் இதயம்.
உன் பெயரைச் சொல்லிப் பழக்கப்பட்டவை அல்லவா என் உதடுகள்.
சுயநலம் உனது உள்ளத்தில் இருந்தால் சுயமாக இருண்டு போகும் இந்த உலகம்
மாட்டுப் பழை. கைத்தியடி, அல்லிமுல்லை வட்டை, அத்தனை வயல்களிலும் பெண்களின் உழைப்பு.
இந்த வட்டைகளும் பொன்னாய் விளைந்து கிடக்கு.
முந்தானைக்குள் உணவை மூடி மறைத்து காக்கை தன் குஞ்;சுக்கு 
உணவூட்டுதல் போல் நீயும் அப்படியே நடக்கிறாய்.
வெள்ளரிப் பழம் பிளந்தாற்ப்போல் இதயம் பிளப்பதுபோல் இருந்தது. 
வேளாண்மை வயலுகளுக்குள்; இருக்கும் பொம்மை போன்று நான் இருப்பது.
முதுமை என்பது உன் தாய்க்கு மட்டுமல்ல உனக்கும்தான்.
என் இதயவாசல் இருள் சூழ்ந்து கிடக்கிறது.
நல்ல பலாப் பழத்தை மூடி வைத்தாலும் வாசனை வருவது போன்று என் காதலும்.
இன்னும் ஒரு சூரியன் இந்த இகத்திலே முளைக்கும் முன்னே வந்திடுங்க.
காக்கை மரங்களில் தங்குவது போல் நாமும் இந்த உலகில் தங்குகிறோம். 
உன் மனம் விரிந்த கடல், 
உன் பாசம் பரந்த வானம்

இப்படி, பல மாதியான சிப்பிகளை இவருடைய குருத்து மணலுக்குள் பொறுக்க முடியும் என நம்புகிறேன். இன்னும் நிறைய இவ்வாறான சிப்பிகள் கிடக்கின்றன.

றபீக்கின் கவிதைகளுக்குள் நவீனத்துவக் கூறுகள் தென்படுகின்றதா எனப் பார்க்க வேண்டும்.
நவீனத்துவக் கூறுகளைக் கொண்டுள்ள இக்காலக் கவிதைகள் பற்றி சில குறிப்பபுக்களைச் சொல்லலாமென விரும்புகிறேன்.

கவிதை நடைகளைக் கொண்டுதான் ஆரம்ப காலங்களில் இலக்கியங்கள் தோற்றம் பெற்றன. அவ்வாறான கவிதைகளில் உவமை, உருவகம், எதுகை, மோனை, இயைபு, அணி போன்றவற்றைப் பெற்றிருந்தன. இந்த அம்சங்களைக் கொண்ட கவிதைகளில் இருந்து மாறி மரபுக் கவிதைக்குரிய எதையுமே சேர்த்துக்கொள்ளாமல் இன்றைய கவிதைகள் வெளிப்படுகின்றன. றபீpக்கின் கவிதைகள் உட்பட இன்றைய கவிதைகள் நவீனத்துவ அம்சங்களைப் பின்பற்றி எழுதப்படுகின்றன.
நவீனத்துவம் என்பது அரசியல், பொருளியல், தத்துவம், அறிவியல், கலை, இலக்கியம் என சகல துறைகளையும் ஒரே நேர்கோட்டில் பிரமிக்கத்தக்க விதமாக பாதிக்கின்ற ஒன்று. நவீன அரசமைப்பு, ஜனநாயகம், தேசிய உருவாக்கம், நகரநிர்மாணம், மத்திய தரவர்க்க உருவாக்கம், நீதி வழங்கும் முறை, கல்வி, மருத்துவம், குடும்ப அமைப்பு என நவீனத்துவம் பாதிக்காத துறைகளே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

பின்வருவன கவிதைகளுக்கான நவீனத்துக் கூறுகளாகும்.
1. கவிதைக்குரிய மரபைப் புறம் தள்ளிவிடுதல்.
2. படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் உள்ள உறவின் அமைப்பு.
3. வாசகனுக்கு முழுமையாகச் சிந்திக்கும் இடத்தை வழங்குதல்.
4. பூடகமான தன்மை.

கவிதைக்குரிய மரபைப் புறம்தள்ளிவிடுதல் என்று சொல்லும்போது இக்காலக் கவிஞர்கள் கூடுதலாக கவிதைகளுக்கென்று விதிக்கப்பட்டிருந்த உவமை, உருவகம், அணி, எதுகை, மோனை, இயைபு போன்ற மரபுகளை ஒதுக்கிவிட்டு கவிதை இயற்றுகின்றனர். உரை நடையைச் சிதைத்து கவிதை படைக்கின்றார்கள். கவிதையால் நேரில் முகம் பார்த்துப் பேசுவது ஒரு நேர்முகத் தன்மையாக இருக்கிறது. இன்றைய நவீன கவிஞர்கள் பலரும் இம்முறையைப் பின்பற்றி கவிதைகள் எழுதுகின்றனர்.
இரண்டாவது கூறு படைப்பாளனுக்கும் வாசகனுக்குமுள்ள உறவின் அமைப்பு. இது படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் மரபு சார் கவிதைகளில் ஒரு பெரிய இடைவெளியைக் ஏற்படுத்துகிறது. நவீன கவிதைகளின் இடைவெளி சுருங்குகிறது. கவிஞன் தனது குடும் நிலவரத்தையும், தன்னையும், தன்னைப் பாதித்தவற்றையும் கூறுவதன் மூலம் படைப்பாளனுக்கும், வாசகனுக்கும் இடையே உள்ள இடைவெளி மிகவும் அண்மித்துவிடுகிறது. அதாவது பொதுவான தூரப்பட்ட விடயங்களைவிட தனிமனிதனது நிலையைக் கூறுவதால் படைக்கின்ற வருக்கும். வாசிக்கவருக்கும் இடையே உறவு மிகவும் நெருக்கமாகிவிடுகிறது.

வாசகனுக்கு முழுமையாகச் சிந்திக்கும் இடத்தை வழங்குவது மூன்றாவது கூறாகும்.
படைப்பாளன் ஒரு மையத்தினை வைத்துக்கூறி வாசகன் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைமைமாறி படைப்பிலிருந்து எந்தவொரு கருத்தினைக் கொண்டும் வாசகன் மையத்தைச் சிந்திக்க முடியும் என்பதன் மூலம் வாசகனுக்கும் படைப்பில் முக்கியத்துவம் தரப்படுகிறது.
மற்றொரு கூறு பூடகத் தன்மை.

நேராகச் சென்று மையத்தைப் பெறமுடியாமல் அதாவது கவிதையின் கருவைப் பெறமுடியாமல் மறைமுகமாகப் பெறுவது, ஏதாவது குறியீட்டின் மூலமாக உணர்த்துவது பூடகத் தன்மையாகும். மையத்தைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கும். உற்று நோக்கினால் கருவை உணரமுடியும்.
இவ்வாறாக நவீனத்துவமான கவிதைகள் மரபுக் கவிதைகளிலிருந்து வேறுபடுகின்றன. எந்தவொரு சிறு விடயத்தைப் பற்றிக் கூறுவதற்கும் இடமளிக்கிறது நவீனத்துவமான கவிதைகள். வாசகனுக்கும் ஒரு படைப்பாளியின் நிலைக்குச் சிந்திக்க இடமிருப்பதால் தற்காலக் கவிதைகள் வரவேற்கப்படுகின்றன.
தற்கால தமிழ் இலக்கியத்தின் புதிய போக்குகள் நவீனத்துவக் கவிதைகளின் கூறுகள் பற்றிச் சொல்லும்.

ஆக, கவிதைகள் அழ வைக்க வேண்டும் இல்லையெனில் எழு வைக்க வேண்டும் இது அழக பாரதியின் கவிதை.

றபீக்கின் கவிதைகள் மேற்கூறிய கூறுகளையும் உள்வாங்கி இருக்குமா? றபீக் ஒரு மரபுவழிக் கவிஞன். இந்ந குருத்துமணலில் மரபு வழிக் கவிதைகளுக்கான சொதி மணத்துக்கொண்டுதான் இருக்கிறது.


Saturday, April 2, 2011

ஜமீலின் உடையக் காத்திருத்தல்

வெளியீட்டு நிகழ்வில் எனது முதலுரை - டீன்கபூர்

எனது தொடக்கவுரையின் கவிதைத் தோரணம்

மருதமுனை புதுப்புனைவு இலக்கிய வட்டம் ஜமீலின் இரண்டாவது கவிதைப் புத்தகத்தை வெளியிடுகின்றது. முன்னர் ஒரு குழந்தை ஜமீலுக்குப் பிறந்து மரியாதையாக வளர்ந்து வாழ்த்துக்களையும் பரிசில்களையும் பெற்றிருக்கின்றது. வெடிக்கக் காத்திருக்கும் இதன் நிலைப்பாடும் சாதகமாக அமையவேண்டும்.

புதுப்புனைவு இலக்கிவட்டம்; என்ன செய்கிறது. ஆம் இலக்கியத்துக்குப் பணி செய்கிறது. மருதமுனையின் நாமத்தை தற்கால இலக்கியவாயிலாக நிலைப்படுத்துகிறது. முன்னெரெல்லாம் பல்வேறு வகையான இலக்கிய அமைப்புக்கள் தோன்றி அதன் பணிகளைச்; செய்துவிட்டு போய்விட்டன. இப்போது கொஞ்ச நண்பர்கள் சேர்ந்து முடியமானதைச் செய்துவருகிறார்கள். கொத்தனை நினைவூட்டினார்கள், பல கவிதை நூல்களை வெளிட்டார்கள், வெளியிடவுள்ளார்கள், கருத்தாடல்கள், நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துகிறார்கள், கவியரங்கு செய்கிறார்கள், நிலாவில் இலக்கியம் பேசி உண்டு மகிழ்கிறார்கள், இப்படிப்போகிறது.

ஜமீல் யார்? றகுமான் ஏ.ஜபாரின் தம்பி. புதுப்புனைவு இலக்கிய வட்டத்தின் செயற்பாட்டாளர்களின் ஒருவாராக இருந்து இலக்கியபணி செய்துவருகிறார். நண்பர்களின் நிகழ்வுகளில் சொந்தமாய் நின்று உதவுபவர். இலக்கியம் பேசுவோர் உண்மையாய்ப் பேசுவதை விரும்புபவர். மனசுக்குள் செருப்பை மூட்டி கண்களால் கக்குவதை விரும்பாதவர். மூத்த இலக்கியக்காரர்களிடம் நெருங்குவதற்கு மிகவும் அஞ்சுபவர். கதிரையால் எறிவார்களோ? நாயை உசிக்காட்டுவார்களோ? கொண்டு செல்லும் அழைப்புக்களை பின்புறமாய் எறிவார்களோ? உன்னைக்குத்தி உன் எழுத்துக்களால் மலைகோர்ப்பேன் எனும் வெறியர்களிடம் நெருக்கமாகிடப்; பயப்பட்டு தலையைக் பிய்ப்பவர். ஆயினும் இன்றைய தனது விழாவிற்கு மனிதர்களை அழைத்திருக்கின்றார். வடித்துத் துடைத்துடைத்திருக்கின்றார். வடிகட்டி தேங்காய்ப்பால் பிளிந்திருக்கின்றார். உண்மையாளர்களை, நேர்மையாளர்களை, பாகுபாடு செய்யாதவர்களை அழைத்திருக்கின்றார். அவர்தான் ஜமீல். ஜமீலுக்குத் தெரியும் காட்டுவெள்ள மனிதர்களையும், கவிஞர்களையும். நானும் அவரும் அனுபவித்தும் இருக்கின்றோம். பயங்கரவாதிகளுக்கு பயந்தமாதிரி. சில இலக்கிய வாதிகளின் தலையில் கர்வம் குடிகொண்டிருக்கும் அப்படி ஜமீல் இருக்கமாட்டார். விருந்தோம்புவார். மரியாதையாக வழி அனுப்பி வைப்பார்.

ஜமீலின் உடையக் காத்திருத்தல் கவிதைகள் பற்றி பலர் இங்கு பேசக் காத்திருக்கின்றார்கள். ஆயினும் என்னுள் ஊடுருவிக்கிடந்த இணையத்தின் கவிதை விமர்சனப் பக்கங்களின் அம்சங்களை தங்களுடன் பகிர்ந்துகொள்ள விளைகிறேன். கவிதையின் ஆணிவேரை இணையம் தெளிவாகப் பேசுவதாக அறிகின்றேன். பத்திரிகைகள், சஞ்சிகைகள் சரியான கவிதை மொழியைச் சொல்லத் தவறி நிற்கின்றன. சில கவிஞர்களுக்கும் கவிதையின் அம்சங்கள் தெரியாது. அந்தவகையில் சில விடயங்கள்.

கவிதையை கலையின் அரசி என்பார்கள். கல்லாத கலை என்பார்கள். கவிதைக்கு என்று பல அம்சங்கள் உண்டு. அவற்றின் கூட்டுறவுமட்டும் கவிதையை உண்டாக்கிவிடாது. விளங்கும் கவிதை அல்லது விளங்கா கவிதை என்றாலும் கவிதையின் முக்கிய பாகம் அதன் ஜீவசக்தி. அது கவிஞனின் உள் மனத்தின் உணர்ச்சி வேகத்தைப் பொறுத்துத்தான் இருக்கிறது.

உணர்வதும், கருதுவதும் அனைவருக்கும் உரியவை. அவற்றை அனுபவமாக்கி அழகுணர்ச்சியுடன் வெளிப்படுத்துவது கவிஞனால் மட்டுமே முடியும். இலக்கியத்தில் என்ன என்பதைவிட எப்படி என்பதே படைப்பாளியை மதிப்பிடும் அளவுகோல் ஆகும். கவிஞனின் வெளிப்பாட்டு முறைகள் எவ்வாறு தொழிற்பட்டுகின்றன. இயற்கையை எவ்வாறு பயன்படுத்துகின்றார் என்பதையும் உணர்ச்சிகளை எவ்வண்ணம் வெளிப்படுத்துகின்றார் என்பதையம் படிக்கின்றவரை எவ்வாறு பார்க்கின்றவனாக மாற்றிக் காட்சிகளை உருவாக்கின்றார் என்பதையும் காணலாம்.

கவிதையை மனித மனத்தின் சுனையாகக்கொள்ளலாம். ஊற்று பீறிட்டுக் கிளம்புவதில் கவிதை எழுதுபவனுக்குப் பங்கில்லை. ஊற்றின் விசையைப் பொறுத்துப் பள்ளம் நோக்கிப் பாய்கின்றபோது அது நதியென்று ஆகிறது. நதியின் பாதையைக்கூடக் கவிஞன் தீர்மானித்துவிட முடிவதில்லை. நதியின் பாதையை நதியே தீர்மானிக்கின்றது. சமுதாய அசுத்தங்கள் கலந்து மாசுபடாமல் நதியைப் பாதுகாப்பதே நதிக்கும் நாகரிகத்துக்கும் ஒரு கவிஞன் செய்துவிடக்கூடிய மிகப்பெரிய பணி. நதியுடனான ஊடாட்டத்தின் மூலம் அவனுடைய சுய அசுத்தங்கள் அவ்வப்போது கழுவப்படுவதே கவிதையால் கவிஞனுக்குக் கிடைக்கக்கூடிய மிகப்பெரிய பயன்.

ஒருவர் அதிகபட்சம் தனது எந்தெந்த அசுத்தங்கள் நதியால் எந்தெந்த சமயத்தில் கழுவப்பட்டன என்று எழுதலாம். ஒரு தேர்ந்த கவிஞனால் நதியை மடைமாற்றிவிட இயலலாம். எப்படியானாலும் இங்கே நதிதான் முன்னிலைப்பட வேண்டும். வேறுமாதிரியாக இருக்கும்போது வாசகருக்குக்; கவிஞன் கிடைப்பார். கவிதை கிடைப்பதில்லை. வாழ்வின் ஊற்று, இருத்தலின் ஊற்று. ஒரு தனிமனத்தின் வழியாகக் கவிதையென வெளிப்படுகிறது எனலாம். ஒரு மோசமான கவிதையில் கூட வாழ்வின் கீற்றை, உயிர்ப்பின் ஒளியைப் பார்த்தவிட இயல்வதால் வாழ்வின் சாரமே கவிதையென வெளிப்படுகிறது என்றுகூடச் சொல்லிவிடலாம். நன்றி காலச் சுவடுக்கு

கவிதை என்றால் என்ன? எது நல்ல கவிதை என்கின்ற வகையிலான கேள்விகள் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகின்றன. சிலர் இதுதான் கவிதை எனச் சொல்லத் துணிந்ததைக் காலம் கவ்விச் சென்றுவிட்டது. இதுதான் கவிதை இது கவிதை இல்லை என்று யாராலும் திட்டவட்டமாகச் சொல்லிவிட முடியாது. கவிதை மனசுக்குள் உயிர்ப்பித்த குழந்தைகள் ஒவ்வொரு குழந்தையும் வௌ;வேறு வகையான மனத்துடன் கொள்கையுடன் பிறக்கின்றன.;.

பொதுவாக கவிதை என்பதற்கான சில அடிப்படைக் கூறுகள் சொல்லப்பட்டுள்ளன. இவ்வகைக் கூறுகள் சிலவற்றை சுந்தரராமசாமியம் சொல்லியிருக்கின்றார். அவர் ஒரு கவிதையில் சொல்லியிருப்பதைப் பார்ப்போம். சில வரிகள்.


கவிதை என்பது சுதந்திரம்
கவிதை என்பது கட்டுப்பாட்டின் அட்டகாசம்

எனும் வரிகளைக் கவிதை தோன்றவதற்கான சாதக நிலையாகவும், கவிதை எழுதுதல் எனும் முறைப்பாட்டைச் சொல்வதாகவும் அமைகிறது.

கவிதை என்பது பூஜ்ஜியம்
உளறல்களின் பேரர்த்தம்
கவிதை என்பது ஊருடுவி உருக்குலைப்புது

என்னும் மூன்றுவரிகளையும் கவிதையின் தன்மையாகவும்

கவிதை என்பது பற்றுக்கோலின் கண்கள்
கவிதை என்பது உடலுறவின் உச்சக்கட்டம்

எனும் இரண்டு வரிகளையும் கவிதையின் செயலாக்கத்தைச் சொல்லும் வரிகளாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

ஆக, மேற்கூறிய வரிகளுக்கு ஒப்பாக ஜெமீலின் கவிதைகள் எவ்வாறான மொழிக்குள் தாழ்ந்துபோய் அல்லது மிதந்துபோய்க் கிடக்கின்றன என்பதை இன்றைய கருத்தாடல்கள் மூலம் அறிய இருக்கின்றோம்.;.
நன்றி.

நூலாசிரியர்

27.03.2011
மருதமுனை நூலக கேட்போர் கூடம்
தலைமை
சத்தார் எம். பிர்தௌஸ்
புதப்புனைவு இலக்கிய வட்ட வெளியீடு